ஆதார் மையத்தில் சூப்பர்வைசர் வேலை.. தமிழ்நாட்டிலும் பணியிடம் இருக்கு! செம சான்ஸ்
சென்னை: ஆதார் மைய அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் சூப்பர்வைசர், ஆபரேட்டர் என 282 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்திலும் காலிப்பணியிடங்கள் உள்ளன. 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
ஆதார் அடையாள அட்டை இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் பதிவுக்காக நாடு முழுவதும் ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட தலைநகரங்களில் ஆதார் மையத்தின் நேரடி அலுவலகங்கள் உள்ளன. CSC e Governance - india limited என்ற அரசுசார் நிறுவனம் இதை இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனம் செயல்படுத்தும் ஆதார் மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஆதார் சூப்பர்வைசர் / ஆபரேட்டர்: 282 பணியிடங்கள் உள்ளன. மத்திய பிரதேசத்தில் 28, உத்தர பிரதேசம், 23, மகாராஷ்டிரா 20, பஞ்சாப் 12, தெலுங்கானா- 11, கேரளா - 11, கர்நாடகா-10, தமிழ்நாடு- 03, புதுவை 01, ராஜஸ்தான் 04, குஜராத் 06, என மொத்தம் 282 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ற அனுபவமும் அவசியம். அதாவது, மத்திய அரசின் ஆதார் ஆபரேட்டர் / சூப்பர்வைசர் சான்றிதழ் அவசியம்.
வயது வரம்பு:
30.01.2026ன் படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cscspv.in/












Click it and Unblock the Notifications