Accenture-ல் வேலைவாய்ப்பு.. சென்னை, கோவையிலேயே பணி.. டிகிரி மட்டுமே போதும்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இந்தியாவில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஆக்சென்ச்சர்-ல் (Accenture) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் சென்னையிலும் கோவையிலும் பணியை பெற முடியும். அதோடு தொடக்கத்தில் மாதசம்பளமாக ரூ.38 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று அக்சென்ச்சர் (Accenture). சென்னை, கோவை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அக்சென்ச்சர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடம்: ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் (System And Application Services Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
கல்வி தகுதி: சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் பணிக்கு பிஎஸ்சி, பிசிஏ, பிபிஏ, பிஏ, பிகாம், பி.வாக் (B.Voc), பிஎம்எஸ், பிபிஎஸ், பிஎப்எம், பிபிஐஐ, பிஏஎப், பிஎட், பிஎம்மெ், பிஎப்ஏ, பிஎஸ்மைக், பி.டிசைன், எம்சிம், எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி தவிர), எம்ஏ, எம்காம், எம்எப்ஏ படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த படிப்புகளை கல்லூரி சென்று முழுநேரமாக முடித்திருக்க வேண்டும். பார்ட் டைம் முறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளி்ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
மாத சம்பளம்: அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,44,200 சம்பளமாக வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் தொடக்கத்திலேயே மாதம் ரூ.28,683 சம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் எங்கு: பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, குர்கிராம், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பத்துக்கான கடைசி தேதி என்று எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications