Accenture-ல் வேலைவாய்ப்பு.. சென்னை, கோவையிலேயே பணி.. டிகிரி மட்டுமே போதும்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இந்தியாவில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஆக்சென்ச்சர்-ல் (Accenture) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் சென்னையிலும் கோவையிலும் பணியை பெற முடியும். அதோடு தொடக்கத்தில் மாதசம்பளமாக ரூ.38 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று அக்சென்ச்சர் (Accenture). சென்னை, கோவை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அக்சென்ச்சர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடம்: ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் (System And Application Services Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
கல்வி தகுதி: சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் பணிக்கு பிஎஸ்சி, பிசிஏ, பிபிஏ, பிஏ, பிகாம், பி.வாக் (B.Voc), பிஎம்எஸ், பிபிஎஸ், பிஎப்எம், பிபிஐஐ, பிஏஎப், பிஎட், பிஎம்மெ், பிஎப்ஏ, பிஎஸ்மைக், பி.டிசைன், எம்சிம், எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி தவிர), எம்ஏ, எம்காம், எம்எப்ஏ படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த படிப்புகளை கல்லூரி சென்று முழுநேரமாக முடித்திருக்க வேண்டும். பார்ட் டைம் முறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளி்ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
மாத சம்பளம்: அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,44,200 சம்பளமாக வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் தொடக்கத்திலேயே மாதம் ரூ.28,683 சம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் எங்கு: பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, குர்கிராம், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பத்துக்கான கடைசி தேதி என்று எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications