Wipro-வில் சூப்பர் வேலை.. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. சூப்பர் சான்ஸ்!
சென்னை: விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள சிஸ்டம் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோ (Wipro) ஒன்று. இந்த நிறுவனம் பெங்களூரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் விப்ரோவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின் படி விப்ரோ நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினியர் (System Engineer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இருப்பினும் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் வின்டோஸ் (Windows), அவுட்லுக்(Outlook), டீம்ஸ் (Teams), சிட்ரிக்ஸ் (Citrix), விபிஎன் (VPN), விடிஐ (VDI), செக்யூரிட்டி அப் (Security App) உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மற்றும் இ-மெயில் வழியாக பதிலளித்து அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டியிருக்கும். ரிமோட் முறையில் சிஸ்டம் பிரச்சனைகளை தீர்க்க அறிந்திருக்க வேண்டும். அதோடு புதிய தொழில்நுட்பம் பற்றி கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வேலையை விரும்புவோர் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பிப்பது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications