Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைநிறைய சம்பளம்.. டிகிரி மட்டுமே போதும்.. தமிழ்நாட்டிலேயே சூப்பர் வேலை.. அழைக்கும் சென்ட்ரல் வங்கி

மும்பையை தலைமையிடமாக கொண்டு பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை வங்கியாக உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து வங்கி வேலையை பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டிலேயும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று தான் சென்ட்ரல் வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி Apprentice பிரிவில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 230 பணியிடங்களும், புதுச்சேரியில் ஒரு பணியிடமும் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்கள் பிற மாநிலங்களில் காலியாக இருக்கின்றன.

 Central Bank Of India Recruitment 2023 for 5000 Vacancy

இந்த பணிக்கு மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனவங்களில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்லாம். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 20 வயது நிரம்பி இருப்பதோடு, அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 31.03.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினரக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் பணிசம்பந்தமாக டிராவல் செய்ய வேண்டி இருந்தால் அலோவன்ஸ் தொகையும் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.600, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு ரூ.400 என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் centralbankofindia.co.in எனும் இணையதளம் மூலம் ஏப்ரல் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் உள்ளூர் மொழி ப்ரூப் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+