அரசு வேலை! 6 ஆயிரம் பணியிடம்.. கை நிறைய சம்பளம்.. பட்டதாரிகள், பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள், விடுதி வாடர்ன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகள் (EMRS) நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் 8 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள், விடுதி வாடர்ன்கள், நூலகர் உள்ளிட்ட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்: பட்டதாரி ஆசிரியர்கள் (5,660), விடுதி வார்டன் (ஆண்-335), விடுதி வார்டன் (பெண்-334) என மொத்தம் 6,329 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தி, ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடம் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இசை, நுண்கலை, உடற்பயிற்சி, நூலகர் பணிக்கு துறை சார்ந்த பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். வார்டன் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். எனினும், அரசு விதிகளின் படி வயது வரம்புகளில் தளர்வும் உண்டும். அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வும், எஸ்/எடி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும் உண்டு.
தேர்வு முறை எப்படி?: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, மொழி திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கான விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி கடைசி நாளாகும்.
சம்பளம் எவ்வளவு?: பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Rs.44900 - 142400/-) வரையும், இசை, நுண்கலை, PET- ஆகிய பணிகளுக்கு (Rs. 35400- 112400) வரை சம்பளம் வழங்கப்படும். விடுதி வார்டன் பகுதிகளுக்கு (Rs. 29200 - 92300) வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். வார்டன் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட முழுமையான தகவல்களை https://emrs.tribal.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
-
இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. 350 பணியிடங்கள்.. பிஇ முடித்தவங்களுக்கு ஜாக்பாட் -
IT Jobs: சென்னை - பெங்களூர் உள்பட 3 இடங்களில் நாளை இண்டர்வியூ.. TCS-யில் காலிப்பணியிடங்கள் -
IT JOBS: 2026ல் படிப்பை முடித்தோருக்கு ஜாக்பாட்.. அலோவன்ஸ் + சம்பளத்துடன் வேலை தரும் Cognizant -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications