அரசு வேலை! 6 ஆயிரம் பணியிடம்.. கை நிறைய சம்பளம்.. பட்டதாரிகள், பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள், விடுதி வாடர்ன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகள் (EMRS) நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் 8 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள், விடுதி வாடர்ன்கள், நூலகர் உள்ளிட்ட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்: பட்டதாரி ஆசிரியர்கள் (5,660), விடுதி வார்டன் (ஆண்-335), விடுதி வார்டன் (பெண்-334) என மொத்தம் 6,329 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தி, ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடம் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இசை, நுண்கலை, உடற்பயிற்சி, நூலகர் பணிக்கு துறை சார்ந்த பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். வார்டன் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். எனினும், அரசு விதிகளின் படி வயது வரம்புகளில் தளர்வும் உண்டும். அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வும், எஸ்/எடி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும் உண்டு.
தேர்வு முறை எப்படி?: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, மொழி திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கான விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி கடைசி நாளாகும்.
சம்பளம் எவ்வளவு?: பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Rs.44900 - 142400/-) வரையும், இசை, நுண்கலை, PET- ஆகிய பணிகளுக்கு (Rs. 35400- 112400) வரை சம்பளம் வழங்கப்படும். விடுதி வார்டன் பகுதிகளுக்கு (Rs. 29200 - 92300) வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். வார்டன் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட முழுமையான தகவல்களை https://emrs.tribal.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications