Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்ற வேண்டுமா.. சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை குரோம்பேட்டையில், வரும் நவம்பர் 29-ந் தேதி ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சிக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ள சென்னை மாநகர மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.

ஐடிஐ முடித்த இளைஞர்கள் தொழில் பழகுனர் பயிற்சி பெற விரும்புவார்கள். பொதுவாக ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்று திறன் (Semi skilled) வாய்ந்தவர்களை தொழிற் நிறுவனங்களில் செய்முறை பயிற்சி வழங்கி திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்குவதே தொழிற் பழகுநர் பயிற்சியின் நோக்கமாக உள்ளதுது. இத்திட்டம் ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கும் தொழிற் சாலைகளின் திறன் தேவைகளுக்கும் உள்ள இடைவெளிக்கு பாலமாக இருக்கிறது.

 Chennai Metropolitan Transport Corporation Super Job Announcement for ITI professionals

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 2.5ரூ முதல் 15ரூ வரை தொழிற் பழகுநர்களை ஈடுபடுத்த வேண்டியது சட்டமாகும். தொழிற் பழகுநர் சட்டத்தின்படி பயிற்சிக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட சுய விருப்பத்தின் பேரில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டாயமாக பணிபுரியும் நிறுவனங்களில் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்க வேண்டும்.

அந்த வகையில் மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், மாநில அரசு துறைகள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஐடிஐ படித்தவர்கள் பயிற்சிக்கு சேர்க்கப்படுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மின்வாரிய கழகம், போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் உள்பட பல்வேறு நிறுவனங்களை அப்பரண்டீஸ் பயிற்சி தருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்பரண்டீஸ் ஆக சேர வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். அவர்களுக்கான வாய்ப்பு வந்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி (அப்பரண்டீஸ்) அளிக்கப்பட உள்ளது.

இந்த தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியான ஐ.டி.ஐ. பிரிவுகளில் (மோட்டார் மெக்கானிக்கல் வெகிகிள், மெக்கானிக் டீசல், எலெக்ட்ரீஷன் அன்ட் வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+