சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்ற வேண்டுமா.. சூப்பர் வாய்ப்பு
சென்னை: சென்னை குரோம்பேட்டையில், வரும் நவம்பர் 29-ந் தேதி ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சிக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ள சென்னை மாநகர மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.
ஐடிஐ முடித்த இளைஞர்கள் தொழில் பழகுனர் பயிற்சி பெற விரும்புவார்கள். பொதுவாக ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்று திறன் (Semi skilled) வாய்ந்தவர்களை தொழிற் நிறுவனங்களில் செய்முறை பயிற்சி வழங்கி திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்குவதே தொழிற் பழகுநர் பயிற்சியின் நோக்கமாக உள்ளதுது. இத்திட்டம் ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கும் தொழிற் சாலைகளின் திறன் தேவைகளுக்கும் உள்ள இடைவெளிக்கு பாலமாக இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 2.5ரூ முதல் 15ரூ வரை தொழிற் பழகுநர்களை ஈடுபடுத்த வேண்டியது சட்டமாகும். தொழிற் பழகுநர் சட்டத்தின்படி பயிற்சிக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட சுய விருப்பத்தின் பேரில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டாயமாக பணிபுரியும் நிறுவனங்களில் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்க வேண்டும்.
அந்த வகையில் மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், மாநில அரசு துறைகள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஐடிஐ படித்தவர்கள் பயிற்சிக்கு சேர்க்கப்படுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மின்வாரிய கழகம், போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் உள்பட பல்வேறு நிறுவனங்களை அப்பரண்டீஸ் பயிற்சி தருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்பரண்டீஸ் ஆக சேர வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். அவர்களுக்கான வாய்ப்பு வந்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி (அப்பரண்டீஸ்) அளிக்கப்பட உள்ளது.
இந்த தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியான ஐ.டி.ஐ. பிரிவுகளில் (மோட்டார் மெக்கானிக்கல் வெகிகிள், மெக்கானிக் டீசல், எலெக்ட்ரீஷன் அன்ட் வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications