Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8ம் வகுப்பு பாஸா நீங்க? அழைக்கும் சமூக நலத்துறையின் ஒன் ஸ்டாப் சென்டர்! சென்னையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடசென்னை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவில் இயங்கும் ஒன் ஸ்டாப் சென்டரில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சமூக நலத்துறையின் கீழ் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவில் ‛ஒன் ஸ்டாப் சென்டர்' இயங்கி வருகிறது. வன்முறையால் பாதிக்கப்படும்பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர உதவிகள் வழங்கும் நோக்கத்தில் இந்த சென்டர் இயங்கி வருகிறது.

Chennai One Stop Centre recruitiment 2024 for various post including Case Worker

மாவட்ட வாரியாக ‛ஒன் ஸ்டாப் சென்டரில்' காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தென்சென்னை மாவட்ட ஒன் ஸ்டாப் சென்டரில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி Case Worker பணிக்கு 3 பேர், Security பணிக்கு ஒருவர், Multi Purpose helper பணிக்கு 2 பேர் என மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் Case Worker பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பட்டப்படிப்பை Social Worker பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

அதோடு மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் Counselling Psychology அல்லது Development Management பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு அல்லது அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டம் சார்ந்த அமைப்பில் ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும் உள்ளூரை சேர்ந்தவராகவும்,வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

செக்யூரிட்டி பணிக்கு ஆண் மற்றம் பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டு்ம. மாதசசம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மல்டி பர்பஸ் ஹெல்பர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம்வகுப்பு பாஸ் அல்லது 10ம் வகுப்பு பெயில் ஆகியிருப்பதோடு சமையல் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்குள் உள்ளூரை சேர்ந்தவர்கள் தான் சேர்ந்தவர்கள் தான் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 13ம் தேதி மாலை 5 மணிக்கள் https://chennai.nic.in/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து வழங்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 01 என்ற முகவரிக்கு நேரில் அல்லது ஸ்பீட் போஸ் முறையில் அனுப்பலாம்.

இல்லாவிட்டால் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

பணி தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பை காண Click Here

பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+