அஞ்சல் துறையில் அருமையான சான்ஸ்.. 10 வகுப்பு படித்தால் போதும்.. நாளை சென்னையில் நேரடி இண்டர்வியூ
சென்னை: சென்னையில் தபால்துறை சார்பில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்களை நியமிக்க ஜனவரி 30ம் தேதி ( நாளை) நேர்காணல் நடைபெற உள்ளது. 10 வகுப்பு படித்த யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் , அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவர்களை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவராக வேண்டும் என்றால் பட்டதாரியாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
10 வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது நிறைவு பெற்ற யார் வேண்டுமானாலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவராக மாற முடியும். மேற்கண்ட தகுதி உடைய சுயதொழில் செய்யும், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி, சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் தராளமாக இந்த பணிக்கு நேரில் போய் விண்ணப்பிக்கலாம்.
இதில் கீழ்கண்ட கூடுதலாக சில தகுதி இருந்தால் உடனே விரும்புவார்கள்.. ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன்அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள், சொந்த பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருந்தால் தாராளமான நாளை நேர்காணலில் பங்கேற்கலாம்.
அதேநேரம் இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதி கிடையாது. நேர்காணலில் பங் கேற்க விரும்புபவர்கள் 3 பாஸ்போர்ட் அளவு புகைப் படம், அசல் மற்றும் இரண்டு நகல் -வயது, முகவரி மற்றும் கல்விச் சான்று ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் செயின்ட் தாமஸ் மவுண்ட் தலைமை அஞ்சலகம், சென்னை- 600 016-ல் உள்ள அலுவலகத்தில் ஜனவரி 30-ம் தேதி (அதாவது நாளை ) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக மாறி நன்றாக சம்பாதிக்க முடியும்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications