சென்னை இளைஞர்களுக்கு அழைப்பு.. ஊர்காவல் படையில் சேர விருப்பமா? உடனே இதை பண்ணுங்க
சென்னை: போலீசுக்கு உதவியாக இயங்கி வரும் ஊர்காவல்படையில் சேர சென்னை இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சேர 10ம் வகுப்பு வரை பயின்றிருந்தால் போதும். இந்த வாய்ப்பை சென்னை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியா-சீனா போருக்கு பின்னர், காவல்துறையினருக்கு உதவும் நோக்கில் 1962ல் உருவாக்கப்பட்டதுதான் ஊர்காவல்படை. இப்படையில் உள்ளவர்கள் போலீசாருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஊர்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், "சென்னை பெருநகர ஊர்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்கவேண்டும் தேர்ச்சி செய்யப்படும் ஊர்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.
சலுகைகள் : சீருடை, தொப்பி, காலணி ஆகியவை வழங்கப்படும். இரவு ரோந்துபணி, பகல் ரோந்துபணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும். பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டுமே.
வெகுமதிகள்: சிறப்பாக மெச்சத் தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் 14.11.2024 முதல் இலவசமாக பெற்று பூர்த்திசெய்து 23.12.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.
முகவரி: சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15. தொடர்புக்கு, :94981 35190, 95667 76222" என்கிற எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
"5000 பேருடன் உறவு.. அதுக்கு என்ன இப்போ?" கள்ள உறவை வசமாக பிடித்த மனைவி.. அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
காட்டுக்குள் போன மாணவி.. துண்டு துண்டான உடலைப் பார்த்து கதறிய குடும்பம்! துடிதுடித்த தூத்துக்குடி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications