8ம் வகுப்பு பாஸா நீங்க? மாதசம்பளம் ரூ.62,200.. ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணி!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்ற நிலையில் மாத சம்பளமாக அதிகபட்சமாக ரூ.62,200 வரை வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பல பணியிடங்கள் அரசு அனுமதியுடன் மாவட்ட நிர்வாகங்கள் நிரப்பி வருகின்றன.
அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள காலிப்பியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி ஓட்டுநர் பணிக்கு 3 பேர், அலுவலக உதவியாளர் பணிக்கு 10 பேர் என மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 8 ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு முடித்திருப்பதோடு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் விண்ணப்பம் செய்ய 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 42 வயதுக்குள் இருக்க வேண்டும். அலுவலர் உதவியாளர் பணிக்கு 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 வயதுக்குள்ளும், கணவரை இழந்த பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இவர்களின் வயது என்பது 01.07.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாத சம்பளம் என்ன?
ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500ம், அதிகபட்சமாக ரூ.62 ஆயிரம் வரையும் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் மாதம் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் தபாலில் இல்லாவிட்டால் நேரில் வழங்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), 2ம் தளம்-கோரம்பள்ளம், தூத்துக்குடி, 628 101. தொலைபேசி எண் 0461 - 2340579 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களுக்கு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்க்காணலுக்கான தேதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
-
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
மிகப்பெரிய பிரச்சனையில் இந்தியா.. ஈரான் விஷயத்தை விடுங்க! இதை கவனிக்காம விட்டா ரொம்ப டேஞ்சர் -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications