3 பிரிவுகளில் காலியிடங்கள்.. மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ரெடியா?
மதுரை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் 3 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்சிஎல் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எச்சிஎல் நிறுவனத்தில் டெஸ்ட் மேனேஜர் (Test Manager), சீனியர்டெஸ்ட் மேனேஜர் (Senior Test Manager), சீனியர் சொல்யூஷன் ஆர்க்கிடெக்ட் (Senior Solution Architect) ஆகிய 3 பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளனர்.
இந்த பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி அல்லது இன்ஜினியரிங் சார்ந்த படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். டெஸ்ட் ஆட்டோமேஷன் ரோலில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் லீட் ரோலில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் Playwright, TypeScript/JavaScript உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Selenium, Cucumber (BDD), ஏபிஐ டெஸ்ட்டிங் டூல்ஸ்களான RestAssured, Postman உள்ளிட்டற்றவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் CI/CD டூல்ஸ்களான ஜென்கின்ஸ், ஜிட்லப் சிஐ உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
அதேபோல், Agile மெத்தடாலஜிஸ் மற்றும் எஸ்டிஎல்சி தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
பணி என்பது மதுரையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு ரெஸ்யூம் உள்பட பிற விவரங்களை அனுப்பி வைக்க கொண்டும். சப்ஜெக்ட் லைனில் Playwright Automation Test Lead Madurai என எழுதி அனுப்பி வைக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications