மதுரை HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை.. நாளை காலை 9 மணிக்கு இண்டர்வியூ.. நல்ல சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜனவரி 10ம் தேதி (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் எச்சிஎல் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் தான் மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுபற்றிய முழு விவரங்கள் வருமாறு:

எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது Automation Testing Professionals பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தபணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 5+ ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் பணியை விரும்புவோருக்கு Java + Selenium + API Rest Assured-ல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இதற்கான இண்டர்வியூ மதுரையில் நாளை (ஜனவரி 10) நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இண்டர்வியூ மாலை 5 மணி வரை Face to Face முறையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Elcot IT Park, Ilandhaikulam, Madurai, Tamil Nadu 625 001 என்ற முகவரிக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும்.
மேலும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளலாம். இண்டர்வியூ செல்வதற்கு முன்பாக கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் இண்டர்வியூ செல்வோர் ரெஸ்யூம் உள்பட பிற ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications