சென்னையிலேயே ஐடி வேலை.. அழைக்கும் எச்சிஎல்.. நாளை காலை 9 மணிக்கு இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை நாவலூரில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்று பயன்பெறலாம்.
எச்சிஎல் அலுவலகத்தில் தற்போது Embedded Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய பிரிவில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதேபோல் சி++ புரோகிராமிங் லேங்குவேஜில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். Embedded சிஸ்டம்ஸ் மற்றும் மைக்ரோகண்ட்ரோலர்ஸில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். லினக்ஸ் டெவலப்மென்டில் கண்டிப்பாக அனுபவம் இருக்க வேண்டும். அதேபோல் மைக்ரோகண்ட்ரோலர் புரோகிராமிங் (ARM, AVR, PIC) உள்ளிட்டவை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
RTOS எனும் ரியல் டைம்ஆபரேட்டிங் சிஸ்டமில்ஸ் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Strong Debugging மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை Embedded Software Development-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஹார்ட்வேர்- சாப்ட்வேர் இன்டிகிரேஷனில் அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதற்கான இண்டர்வியூ நாளை (நவம்பர் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA 1, Sandhya Infocity, Navalur, என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள செல்போன் எண்ணை பயன்படுத்தி தீர்த்து கொள்ளலாம். இல்லாவிட்டால் [email protected] என்பதை தொடர்பு கொள்ளலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications