மதுரையில் ஐடி வேலை.. HCL தரும் சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாமல் உடனே விண்ணப்பம் செய்யலாம்
மதுரை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து மதுரை உள்பட 3 இடங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளில் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, மதுரை உள்பட சில நகரங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது எச்சிஎல் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
எச்சிஎல் சார்பில் தற்போது ஜாவா ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டும், அதிகபட்சம் 10 ஆண்டுகளும் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய திறமைகள் இருக்க வேண்டும்.
அதன்படி ஜாவா, ஸ்பிரிங்புட், ஃப்ரண்ட்எண்ட் டெக்னாலஜிகளான ஆங்குலர்/ரியாக்கட், எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். அதேபோல் REST APIs மற்றும் மைக்ரோசர்வீசஸ் உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் டேட்டாபேஸஸ்களான MySQL, PostgreSQL, ModngoDB உள்ளிட்டவை பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும் வாய்ப்புள்ளது.
அதேபோல் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி நிர்ணயம் செய்யப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளபடி உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் இண்டர்வியூ முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரை, விஜயவாடா, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications