மெக்கானிக்கல் - எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் முடித்தவரா? சென்னை HCL-யில் வேலை.. ஜன.,8ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜனவரி 8 ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Feedback Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட படிப்புகளைமுடித்திருக்க வேண்டும்.

மேலும் Manufacturing Industry பிரிவில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல்அதிகபட்சமாக 3 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு இன்ஜினியரிங் சார்ந்த டிராயிங், பிற டெக்னிக்கல் டாக்குமென்ட் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் எலிவேட்டர் சார்ந்த சரியான பொருட்களை தேர்வு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் சப்ளையர்ஸ், மெட்டீரியல்ஸ் சார்ந்த ஆர்டர்களை பாலோ செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
தாமதமின்றி Feedback செய்ய தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர இன்னும் சில பொறுப்புகளை நிர்வகிக்க தெரிந்திருக்க வேண்டும். அதுபற்றி கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வி ஜனவரி 8 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் 8, South Phase, MTH Road, Ambattur Industrial Estate, Ambattur என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இண்டர்வியூ செல்வோர் 2 Resume உள்பட பிற தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அனைவருக்கும் ஜெனரல் ஷிப்ட் தான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications