பொதுத்துறை வங்கிகளில் வேலை.. 4 ஆயிரம் பணியிடங்கள்.. டிகிரி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் சுமார் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ தவிர்த்து நாட்டில் உள்ள பிற பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு அமைப்பு மூலம் நிரப்பப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு இந்த பணியிடங்கள் நிரப்பபடுகிறது. தற்போது வங்கிகளில் காலியாக உள்ள 4045 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணிணியில் பணிபுரியும் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புகளில் தளர்வு உண்டு. இத் குறித்த விவரங்களை தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு எப்படி நடைபெறும்?: ஆன்லைன் வழியே மட்டுமே தேர்வு நடைபெறும். முதன் நிலை தேர்வு, மெயின் எக்ஸாம் ஆகியவை நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை நாகர்கோவில்,நெல்லை, வேலூர், விருதுநகர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: கடந்த 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியது. வரும் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிப்பதில் கேட்கப்படும் விவரங்கள், பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்களை https://www.ibps.in/crp-rrb-xii என்ற வெப்சைட்டில் பார்த்துக் கொள்ளலாம்.
தேர்வு எப்போது?: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அட்மிட் கார்டு வெளியிடப்படும். முதன்மை தேர்வு ஆகஸ்ட் 26, 27 மற்றும் செப்டம்பர் 2 ஆம் தேதிகளில் நடைபெறும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் பிற பிரிவினர் தேர்வு கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ பிடபிள்யூடி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் ரூ. 175 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?: அடிப்படை சம்பளமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக வழங்கப்படும். அடிப்படை சம்பளத்தை தவிர பிற அலவன்ஸ்களும் சேர்த்து ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications