பொதுத்துறை வங்கிகளில் வேலை.. 4 ஆயிரம் பணியிடங்கள்.. டிகிரி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் சுமார் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ தவிர்த்து நாட்டில் உள்ள பிற பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு அமைப்பு மூலம் நிரப்பப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு இந்த பணியிடங்கள் நிரப்பபடுகிறது. தற்போது வங்கிகளில் காலியாக உள்ள 4045 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணிணியில் பணிபுரியும் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புகளில் தளர்வு உண்டு. இத் குறித்த விவரங்களை தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு எப்படி நடைபெறும்?: ஆன்லைன் வழியே மட்டுமே தேர்வு நடைபெறும். முதன் நிலை தேர்வு, மெயின் எக்ஸாம் ஆகியவை நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை நாகர்கோவில்,நெல்லை, வேலூர், விருதுநகர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: கடந்த 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்கியது. வரும் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிப்பதில் கேட்கப்படும் விவரங்கள், பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்களை https://www.ibps.in/crp-rrb-xii என்ற வெப்சைட்டில் பார்த்துக் கொள்ளலாம்.
தேர்வு எப்போது?: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அட்மிட் கார்டு வெளியிடப்படும். முதன்மை தேர்வு ஆகஸ்ட் 26, 27 மற்றும் செப்டம்பர் 2 ஆம் தேதிகளில் நடைபெறும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் பிற பிரிவினர் தேர்வு கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ பிடபிள்யூடி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் ரூ. 175 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?: அடிப்படை சம்பளமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக வழங்கப்படும். அடிப்படை சம்பளத்தை தவிர பிற அலவன்ஸ்களும் சேர்த்து ஊழியர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி முடித்தோருக்கு HCL-யில் வேலை.. மார்ச் 16ல் இண்டர்வியூ -
job: தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!












Click it and Unblock the Notifications