Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா? தேர்வு இல்லை.. 10 முடித்தாலே போதும்.. தபால் துறையில் சூப்பர் வேலை.. அதுவும் தமிழகத்திலேயே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3,167 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்டர் மாஸ்டர் என 2 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வு இல்லாமல் நேர்க்காணல் இன்றி பணிக்கு தேர்வு நடைபெற உள்ளதால் அனைவராலும் எளிதாக வேலையை பெற முடியும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கும் தபால் துறை மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல மாநிலங்களை போல் தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்தியாவில் பிபிஎம் (Branceh Post Master)பிரிவு மற்றும் Assistant Branch Postmaster (ABPM/Dak Sevak) பிரிவில் மொத்தம் 40,889 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3,167 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிவிஷன் வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய நீண்ட பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் லிங்க் செய்தியின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

அதன்படி பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.29,380 வரை சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம் பணிக்கு செலக்ட் ஆகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓபிசிக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டிக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு.

எழுத்து தேர்வு இல்லை

எழுத்து தேர்வு இல்லை

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு, நேர்க்காணல் என எதுவும் கிடையாது. விண்ணப்பத்தாரர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதனால் விண்ணப்பம் செய்வோர் எளிதாக பணிக்கு தேர்வாக முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் indiapostgdonline.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். பிப்ரவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.

பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+