ரெடியா? தேர்வு இல்லை.. 10 முடித்தாலே போதும்.. தபால் துறையில் சூப்பர் வேலை.. அதுவும் தமிழகத்திலேயே!
சென்னை: தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3,167 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்டர் மாஸ்டர் என 2 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தேர்வு இல்லாமல் நேர்க்காணல் இன்றி பணிக்கு தேர்வு நடைபெற உள்ளதால் அனைவராலும் எளிதாக வேலையை பெற முடியும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப்பெரிய நெட்வொர்க்காக இருக்கும் தபால் துறை மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல மாநிலங்களை போல் தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்தியாவில் பிபிஎம் (Branceh Post Master)பிரிவு மற்றும் Assistant Branch Postmaster (ABPM/Dak Sevak) பிரிவில் மொத்தம் 40,889 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3,167 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிவிஷன் வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய நீண்ட பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் லிங்க் செய்தியின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் எவ்வளவு?
அதன்படி பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.29,380 வரை சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம் பணிக்கு செலக்ட் ஆகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓபிசிக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டிக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு.

எழுத்து தேர்வு இல்லை
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு, நேர்க்காணல் என எதுவும் கிடையாது. விண்ணப்பத்தாரர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதனால் விண்ணப்பம் செய்வோர் எளிதாக பணிக்கு தேர்வாக முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் indiapostgdonline.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். பிப்ரவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
மத்திய பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை.. 233 காலியிடங்கள்! 81 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications