இந்திய விமானப்படையில் வேலை பார்க்க ஆசையா? வந்தாச்சு அறிவிப்பு.. 153 பணியிடங்கள்!
சென்னை: நாட்டின் முப்படைகளில் ஒன்றாக விளங்கும் இந்திய விமானப்படையில், குரூப் சி பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 153 பணியிடங்களை நிரப்ப விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற விவரங்களை பார்க்கலாம்.
இந்திய விமானப்படையில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 153 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. எல்.டி.சி - 10
2. இந்தி தட்டச்சு செய்பவர் - 01
3. சமையல்காரர் (OG) - 12
4. கடைக்காரர் - 16
5. தச்சர் (SK) - 03
6. பெயிண்டர் (SK) - 03
7. மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) - 53
8. மெஸ் ஸ்டாஃப் - 07
9. சலவை செய்பவர் - 03
10. ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப் (HKS) - 31
11. வல்கனைசர் - 01
12. சிவில் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (சாதாரண தரம்) - 08
கல்வித் தகுதி:
* லோயர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டைப்பிங் திறன் அவசியம்.
* இந்தி டைபிஸ்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தி டைப்பிங் திறன் பெற்று இருக்க வேண்டும். 9,000 கேடிஎம்பிஎச்/ 10500 கேடிஎம்பிச் வேகம் அவசியம்.
* ஸ்டோர் கீப்பர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஸ்டோர்ஸ் மற்றும் அக்கவுண்ட் மெயிண்டனிங்கில் முன் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* குக் (ஆர்டினர் கிரேடு) பணிக்கு கேட்டரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் அவசியம்.
* பெயிண்டர் ( திறன்) - துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.
* கார்பெண்டர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து இருப்பது அவசியம்.
* மல்டி டாஸ்கிங் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஓராண்டு பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கபட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும் வயது வரம்பு தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
சம்பளத்தை பொறுத்தவரை பெரும்பாலான பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் அளிக்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, பிராக்டிக்கல் டெஸ்ட் மற்றும் உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிக்க வரும் 15.06.2025 கடைசி நாளாகும். தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். https://indianairforce.nic.in/- என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications