Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இன்டலிஜென்ஸ் ஆபிசராக ஆசையா.. தமிழக இளைஞர்களே சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நுண்ணறிவு பிரிவில் காலியாக உள்ள 797 இளநிலை நுண்ணறிவு அதிகாரி பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க 23.06.2023 அதாவது நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நுண்ணறிவு பிரிவில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. இன்டலிஜென்ஸ் ஆபிசராக பணியாற்ற விரும்புவோர் நாளை மறுநாளுக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.

Job News in Tamil: 797 Junior Intelligence Officer vacancies in Ministry of Home Affairs

எத்தனை பணியிடங்கள் உள்ளன.என்ன தகுதி. வயது தளர்வுகள் என்ன, கட்டணம் எவ்வளவு , தேர்வு எப்படி நடைபெறும் என்பதை பார்ப்போம்.

பணியின் பெயர்: இளநிலை நுண்ணறிவு அதிகாரி (junior Intelligence Officer) Grade- II (Technical).

மொத்தம் எத்தனை காலியிடங்கள்: 797 (பொது-325, பொருளாதார பிற்பட்டோர்-79, ஒபிசி-215, எஸ்சி-119, எஸ்டி-59).

வயது தகுதி: 23.06.23 தேதியின்படி 18 முதல் 27க்குள். எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்: தேர்வு கட்டணம் ₹50/- மற்றும் விண்ணப்ப கட்டணம் ₹450/-. இதை பொது பிரிவினர், பொருளாதார பிற்பட்டோர் மற்றும் ஒபிசியினர் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு கட்டண விலக்கு உண்டு. இதை விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் முறையில் செலுத்த வேண்டும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in ஆகிய இணையதளங்களின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.06.2023. ஆகும்.

------------

இதுதவிர ரீஜினல் ரூரல் வங்கி என்று அழைக்கப்படும் கிராமிய வங்கிகளில் (Regional Rural Bank) அதிகாரிகள் பணியிடங்கள், I,II & III மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் காலியிடங்கள் என மொத்தம் 8594 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஐபீபிஎஸ்-ஆர்ஆர்பி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது.

ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆபீசர் ஸ்கேல்-1 மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிகளுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வானது, முதல் நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், புதுச்சேரியில் முதல் நிலை தேர்வு (Preliminary) நடைபெறும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய மையங்களில் பிரதான தேர்வு (Main) நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது? www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று 21.6.2023.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+