4 ஆயிரம் பேருக்கு வேலை ரெடி.. ஒரே வருசத்தில் மேஜிக்.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: பெரம்பலூரில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய காலணி தொழிற்சாலை ஒரு ஆண்டிலேயே உற்பத்தியை தொடங்க உள்ளது. வரும் 28ம் தேதி காலணி தொழிற்சாலை தொடங்க உள்ளது. இதன் மூலம 4 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழகத்தில் 2022-ம் ஆண்டு காலணி மற்றும் தோல் உற்பத்தி பொருட்கள் கொள்கை வெளியிடப்பட்டது. அதில் இருந்து இதுவரை ரூ.2,250 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதி வர்த்தகத்தில் தேசிய அளவில் 48 சதவீத பங்களிப்பை தமிழகம் கொண்டுள்ளது. தமிழக அரசின் முழு ஆதரவு இருப்பதாலும், நிலத்தேவைகள், உள்கட்டமைப்பு தேவைகள் கிடைப்பதாலும், கம்பெனிகள் தங்கள் உற்பத்தியை மிக விரைவாக தொடங்க முடியும்.
அந்தவகையில், தமிழக அரசிடம் தொடர்பு கொண்ட நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குள், ஜேஆர் ஒன் கோத்தாரி காலணி நிறுவனம் தனது உற்பத்தியை மிக விரைவில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதன் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டினார்.
சரியாக ஒரு ஆண்டு கழித்து இந்த மாதம் 28-ந் தேதி அதன் தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை பெரம்பலூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ளது. இது, ஒரு தொழிற்சாலை தனது உற்பத்தியை மிகக்குறுகிய காலத்திற்குள் தொடங்க முடியும் என்பதில், அரசுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே இருக்கும் உறவுக்கு நல்ல உதாரணமாகும்.
தமிழகத்தின் தொழில் முதலீட்டு வழிகாட்டி முகமை, தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் அங்கீகாரத்துக்கு தேவையான உதவிகளை செய்வது, வர்த்தக சேவைகளை வழங்குவது, இட மதிப்பீடு போன்றவற்றில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தோல் அல்லாத காலணி உற்பத்தி பிரிவை பெருமளவில் வளர்த்தெடுப்பதில் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும். ஒரு டிரிலியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற முதல்-அமைச்சரின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்" இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications