சென்னை மாநகராட்சியில் வேலை.. மாதம் 30 ஆயிரம் சம்பளம்! எக்ஸாம் கிடையாது.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மையங்களில் 05 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வி தகுதி என்ன, பணியின் தன்மை உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் பொதுசுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் 05 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகு எக்காலத்திலும் பதவி நிரந்தரத்திற்கு உரிமை கோர முடியாது.

பணியிடங்கள் விவரம்:
இந்த நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தின் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்கள், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கன்னமாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்க நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
கல்வித் தகுதி, வயது வரம்பு:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் என பார்த்தால், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / விலங்குகள் காப்பகம் அல்லது விலங்கு நலம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 45 க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்ப படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, சமீபத்தில் எடுக்கப்பட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பிறந்த தேதிக்கான சான்றிதழ் (எஸ்.எஸ்.எல்.சி/ 12 ஆம் வகுப்பு சான்றிதழ்), இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை சுய சான்று அளித்து சமர்பிக்க வேண்டும். வருவாய் துறையிடம் இருந்து பெற்ற குடியிருப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளுடன், கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 04.07.2025 ஆகும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai
Greater Chennai Corporation,
Ripon Buildings, Chennai -600003.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 08.07.2025
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://chennaicorporation.gov.in/gcc/pdf/Applications.pdf
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications