இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள்.. கப்பலில் வேலைன்னா சும்மா.. அதுவும் மாலுமி வேலை!
சென்னை: இந்திய கடற்படையில் 2500 காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 2021 தொகுப்பில் AA & SSR- க்கான Sailors பணியை நிரப்பிட இந்தியக் கடற்படை திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Sailors பணிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 2500 காலியிடங்களை நிரப்பவுள்ளது. எனவே இதற்கு தகுதியுள்ள நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி சான்றிதழ், மருத்துவ தேர்வு ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ 14,600 வழங்கப்படும். பிப்ரவரி 1, 2001 முதல் ஜூலை 31, 2004 வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications