பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை.. டிகிரி முடித்த இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. ரெடியா?
சென்னை: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது மொத்தம் 2,700 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நாடு முழுக்க உள்ள பஞ்சாப் கிளைகளில் மாநில வாரியாக நிரப்பப்பட உள்ள பயிற்சி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொருத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: இந்த பயிற்சி பணியிடங்கள் ( Apprentice) முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆனது.. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்க்கு சம்பளமாக மெட்ரோ நகரங்களில் மாதம் ரூபாய் 15,000மும், பிற நகரங்களில் மாதம் 12 ஆயிரமும் வழங்கப்படும். ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒரு முறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். ஆன்லைன் தேர்வு முறை, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்ப கட்டணமாக பொது/ ஒபிசி பிரிவினருக்கு ரூ.944ம், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 708 -ம், பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.472 ரூபாயும் செலுத்த வேண்டும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.pnbindia.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 14.07.2024 கடைசி நாளாகும்.. ஆன்லைன் விண்ணப்ப தேர்வு வரும் 28 ஆம் தேதி நடைபெறும்.












Click it and Unblock the Notifications