Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கியில் அதிகாரி ஆகணுமா.. புதிதாக 4,455 பணியிடங்கள்! டிகிரி முடிச்சவங்களுக்கு யோகம்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள (Probationary Officer PO) / மேனேஜ்மேண்ட் டிரெய்னி (MT) ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 4,455 பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் வங்கி வேலைகளுக்கு என தனி மதிப்பு, மரியாதை சமூத்தில் உள்ளது. கை நிறைய சம்பளம், சலுகைகள், கவுரமான வேலை உள்ளிட்டவைகளில் வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்பது வேலை தேடுபவர்களின் பெரும் கனவாக உள்ளது. தமிழகத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு அடுத்தபடியாக தேர்வர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தேர்வு அறிவிப்புகளில் ஒன்றாக ஐபிபிஎஸ், வங்கி பணிகளுக்காக வெளியிடும் அறிவிப்பு உள்ளது.

ibps job

எஸ்.பி.ஐ தவிர்த்து பிற பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் இடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமே நிரப்பப்படுகின்றது. அண்மையில் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. தற்போது, பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள (Probationary Officer PO) / மேனேஜ்மேண்ட் டிரெய்னி (MT) ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4,455 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* பேங்க் ஆஃப் இந்தியா- 885
* கனரா வங்கி - 750
* சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா - 200
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 260
* பஞ்சாப் நேஷனல் வங்கி - 200
* பஞ்சாப் & சிந்து வங்கி - 360
என மொத்தம் 4,455 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: இரண்டு பணியிடங்களுக்குமே ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. வயது வரம்பை பொறுத்தவரை 01.08.2024- தேதிப்படி 20 வயது முடிந்தவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்ப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரு.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படிக்கவும். https://www.ibps.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 21.08.2024 கடைசி நாளாகும். தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தேர்வு எழுத விருப்பம் உள்ள இடங்கள் உள்ளிட்டவற்றை கவனமாக தேர்வு செய்யவும். கவனக்குறைவாக தேர்வு செண்டர்களை தேர்வு செய்தால் தொலை தூரங்களில் தேர்வு மையம் ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

தேர்வு எப்போது?: முதல் நிலைத் தேர்வு அக்டோபர் மாதமும், அதில் தேர்வு செய்யப்படுவோருக்கான முதன்மைத் தேர்வு வரும் நவம்பர் மாதமும் நடைபெறும். நேர்முகத்தேர்வு ஜனவரி / பிப்ரவரியில் நடைபெறும்.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில் / கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XIV_final-1.pdf கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+