மத்திய அரசு அலுவலகத்தில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. கடைசி தேதி ஜனவரி 31.. சீக்கிரம் அப்ளை செய்ங்க!
சென்னை: மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் தற்போது புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி பல காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Assistant Audit officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector, Assistant/ Superintendent, Divisional Accountant, Junior Statistical Officer & other posts பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் ஜனவரி 31 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் Computer Based Examination / Computer Proficiency Test/ Data Entry Skill Test போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள் தவிர மற்றவர்கள் ரூ 100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.