For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் மத்திய அரசு பணி.. எழுத்து தேர்வு இன்றி மாத சம்பளம் ரூ.60,000.. விண்ணப்பிப்பது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: எழுத்து தேர்வு இன்றி ரூ.60,000 சம்பளத்தில் தமிழகத்தில் மத்திய அரசு பணியில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ, என்ஜினியரீங் முடித்த அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CSIR(இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனம்) - CECRI (மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம்) அமைந்துள்ளது.

இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

மாத ஊதியம் ரூ.30000-ரூ.1.80 லட்சம்.. அழைக்கும் மத்திய அரசு பணி.. விண்ணப்பம் செய்வது எப்படி?மாத ஊதியம் ரூ.30000-ரூ.1.80 லட்சம்.. அழைக்கும் மத்திய அரசு பணி.. விண்ணப்பம் செய்வது எப்படி?

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

காரைக்குடியில் உள்ள CSIR-CECRIல் Project Associate - I, Project Co-ordinator - I ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Project Associate- I பணிக்கு 18 பேரும், Project Co Ordinator - I பணிக்கு ஒருவர் என மொத்தம் 19 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

Project Associate - I பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் வேதியியல் / இயற்பியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிடெக்கில் பயோ டெக்னாலஜி, பிஇ-பிடெக்கில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரீங், அல்லது எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிஎஸ்சி டிகிரியில் எலக்ட்ரானிக்ஸ், டிப்ளமோவில் EEE அல்லது ECE அல்லது மெக்கானிக்கல் முடித்தவர்கள் விண்ணப்ப முடியும். Project Co-ordinator - I பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Metallurgical Engineering / Metallurgical and Materials Science Engineering பிரிவில் P.hd முடித்திருக்க வேண்டும்.

 சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும். தற்காலிக பணி என்பதால் Project Associate - I பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக(Stipend) ரூ.31,000, Project Co-ordinator - Iக்கு ரூ.60,000(Stipend) கிடைக்கும். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு எழுத்து தேர்வு கிடையாது. நேர்க்காணல் முறையில் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

3 நாள் நேர்க்காணல்

3 நாள் நேர்க்காணல்

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கு உரிய முறையில் பூர்த்தி செய்து கல்வித் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். நேர்க்காணல் அக்டோபர் 18 முதல் அக்டோபர் 21 வரை 3 நாட்கள் ஒவ்வொரு பணிக்கு தனித்தனியே குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற உள்ளது. நேர்க்காணல் CSIR - CECRI,,COLLEGE,ROAD, KARAIKUDI-ல் நடக்க உள்ளது.

பணி தொடர்பான கூடுதல் விபரங்களை காண Click Here

விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

English summary
There is an opportunity to join the central government job in Tamil Nadu with a salary of Rs.60,000 without written examination. All degree, diploma, engineering graduates can apply and benefit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X