கைநிறைய சம்பளம்! கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் காத்திருக்கும் அசத்தலான வேலை! நாளை கடைசி நாள்
சென்னை: தமிழ்நாட்டில் கோவை உள்பட கொங்கு மாவட்டங்களில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு முடித்தவர்கள், டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பானது தமிழ்நாட்டில் சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் கொங்கு மாவட்டங்களாக உள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரிகளில் காலியாக உள்ள 3 பிரிவுகளுக்கு தேவையான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
கோவை-திருப்பூர்: கோவை மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 3 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க் பணிக்கு 3 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நீலகிரி-நாமக்கல்: நீலகிரி மாட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கரூர்-ஈரோடு: கரூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம்ப் டேட்டா ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்) பணிக்கு ஒருவர், ஆபிஸ் பணிக்கு ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கிருஷ்ணகிரி-தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆபிஸ் பியூன் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி என்ன: ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்யூட்டர் அறிவு பெற்றிருப்பதோடு நிமிடத்துக்கு 40 எழுத்துகள் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். ரிசப்ஷன் கம் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருப்பதோடு, நல்ல உரையாடல் திறன் கொண்டிருக்க வேண்டும். டெலிபோன், பேக்ஸ் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதோடு டைப்பிங் திறமையும் இருக்க வேண்டும். ஆபிஸ் பியூன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம் என்ன: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தாங்கள் பணியாற்றும் நகரை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க், ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஆபிஸ் பியூன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
நாளை கடைசி நாள்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 16ம் தேதி(நாளை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும்போது படிப்பு சான்றிதழ்களுடன், பிற ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் செசன்ஸ் நீதிபதியின் தலைமையிலான குழுவினரால் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட வாரியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் உள்ளது.
கோவை பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
திருப்பூர் மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
திருப்பூர் மாவட்ட பணிக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய Click Here
நீலகிரி மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
நீலகிரி மாவட்ட பணிக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
நாமக்கல் மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
கரூர் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஈரோடு பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
கிருஷ்ணகிரி பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
தர்மபுரி மாவட்ட பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications