தமிழ்நாடு போலீஸ் ரிப்போர்ட்டர் வேலை.. +2 தகுதி தான்! நேரடி நியமனம்.. தேதி முடிய போகுது
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளவும்.
தமிழ்நாடு காவல்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவ்வப்போது நிரப்பப்படுகின்றன. இரண்டாம் நிலை காவலர், சப் - இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் உரிய அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து வருகிறது.

இதில், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியுள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழிற்கல்வி தேர்வில் ஆங்கிலம் தட்டச்சு ஹையர் / சீனியர் கிரேடு முடித்து இருக்க வேண்டும். பணி தொடர்பான சுருக்கெழுத்து அறிவும் கட்டாயம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்காலம். எம்பிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது 37 வயது வரை விண்ணப்பி முடியும்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.36,200 - 1,14,800 - வரை வழங்கப்படும். பணியை பொறுத்தவரை அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மாநாடு உள்ளிட்டவை பற்றிய விவரங்களை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் செய்யும் விதமாக இருக்கும்.
தேர்வு முறை: திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திறன் தேர்வை பொறுத்தவரை விண்ணப்பதாரரின் டைப்ரைட்டிங் திறனை அறிந்து கொள்வதாக இருக்கும். விண்ணப்பிக்க வரும் 15. 04. 2024 கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்களே உள்ளது. போதுமான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விரைவில் விண்ணப்பித்து கொள்ளவும்.
பணி விவரங்கள்: இரவு நேரத்திலும் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும். பணியின் தன்மை மற்றும் விண்ணப்பிகும் விவரங்கள், தேர்வு முறை குறித்த முழு விவரங்கள் தேர்வு அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளது. தேர்வு அறிவிப்பினை படிக்க https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/notification14032024.pdf என்ற இணையதளத்தினை கிளிக் செய்யவும்.
-
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications