மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் பணிகள்.. நேர்காணல் தேதி அறிவிப்பு
மதுரை: எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மனநலம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கான 3ஆம் கட்ட நேர்காணல் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.
தென் தமிழக மக்கள் பயனடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாகியும் ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே 50 மாணவர்கள் படித்து வரும் நிலையில் புதிதாக சேர்ந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 100 மாணவர்கள் என தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இருப்பினும், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மனநலம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான நேர்காணலுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கான 3ஆம் கட்ட நேர்காணல் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான 63 பேரை கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்து, அது தொடர்பான விவரங்களை கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியிட்டது. இதனிடையே தகுதி பெற்றவர்களுக்கான 3ஆம் கட்ட நேர்காணல் சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஜூலை 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எய்ம்ஸ் கல்லூரி 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என அறிவிப்புகள் வந்து கொணடுதான் இருக்கின்றன. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரியைக் கண்ணால் கூடக் காணமல் படித்து முடித்துச் செல்வார்கள். அவர்களின் சான்றிதழ்களில் மட்டுமே 'எய்ம்ஸ் கல்லூரியின் பெயர் இருக்கும்' எனப் பலர் விமர்சித்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications