தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள்
தேனி: சட்டம் சார் தன்னார்வலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிவொளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விண்ணப்பிக்க வரும் மே 27ம் தேதி கடைசி நாள் ஆகும்.
தேனி மாவட்டத்தில் சட்ட உதவி மற்றும் சட்டவிழிப்புணர்வை பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்க 50 சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, ஆண்டிப்பட்டி சட்டப்பணிகள் குழுக்களில் சட்ட உதவி மற்றும் சட்டவிழிப்புணர்வை பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்க 50 சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/dlsa-theni என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் போன்ற விரிவான விவரங்கள் அனைத்தையும் முழுமையாக பூர்த்தி செய்து, புகைப்படம் அடங்கிய, விண்ணப்பங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து, “தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், லட்சுமிபுரம், தேனி மாவட்டம்” என்ற முகவரிக்கு தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாள். அன்று மாலை 5 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு இதுதொடர்பான இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications