ரெடியா? மாதஊதியம் ரூ.60,000 முதல் ரூ.1.80 லட்சம் வரை.. அழைக்கும் என்டிபிசி.. சூப்பர் வாய்ப்பு
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்டிபிசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.80 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்டிபிசி(NTPC) எனும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (National Thermal Power Corporation) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மின் உற்பத்தி, மாநிலங்களுக்கான மின்பகிர்மானம் தொடர்பான பணிகளை செய்து வருகிறது.

மேலும் மின் திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை, மின்உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் செய்து வரும் நிலையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
என்டிபிசி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு 66 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் அதன்படி எலக்ட்ரிக்கல் எரிக்சன்(Electrical Erection) பணிக்கு 12 பேர், மெக்கானிக்கல் எரிக்சன் (Mechanical Erection) பணிக்கு 30 பேர், சிவில் கன்ஸ்ட்ரக்சன் (Civil Construction) பணிக்கு 24 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி மற்றம் விருப்பம் உள்ளவர்கள் ntpc.co.in இணையதளம் மூலம் ஏப்ரல் 14ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் பணிக்கான கல்வி தகுதி உள்பட கூடுதல் விபரங்கள் அறிய careers.ntpc.co.in எனும் இணையதளத்தில் வெளியாக உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற உள்ளது.












Click it and Unblock the Notifications