Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ.55,000 சம்பளம்.. என்ஜினீயரிங் முடித்தவரா நீங்கள்? அசத்தலான வேலைக்கு அழைக்கும் என்டிபிசிஎல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்டிபிசிஎல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 223 பேர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.55,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்டிபிசி(NTPC) எனும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (National Thermal Power Corporation) செயல்பட்டு வருகிறது.

 National Thermal Power Corporation Limited recruitment 2024 for 223 Assistant Executive

இந்த நிறுவனம் மின் உற்பத்தி, மாநிலங்களுக்கான மின்பகிர்மானம் தொடர்பான பணிகளை செய்து வருகிறது. மேலும் மின் திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை, மின்உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி என்டிபிசி நிறுவனத்தில் அசிஸ்டென்ட் எக்ஸிக்கியூட்டிவ் ஆபரேஷன் (Assistant Executive - Operations) பணிக்கு 223 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ பிரிவில் எலக்டரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பவர்பிளான்ட்டில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.55 ஆயிரம் வரை வழங்கப்படும். கூடுதல் தங்குமிடம், இரவு பணிக்கான அலோவன்ஸ் மற்றும் பணி செய்வோரின் மனைவி, 2 குழந்தைகளுக்கான மெடிக்கல் வசதிகள் வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://careers.ntpc.co.in/ இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிஇ, எக்எஸ்எம் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.

இப்படி விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் ஸ்கிரீனிங் தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணியாகும். அதாவது பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 ஆண்டு அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்பிறகு தேவையெனில் 2 ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+