Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசின் "நியூ இந்தியா அசூரன்ஸ்" நிறுவனத்தில் வேலைவாய்ப்பு .. 450 காலியிடங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நியூ இந்தியா அசியூரன்ஸ் நிறுவனத்தில் ( New India Assurance Company Limited) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 450 நிர்வாக அதிகாரிகள் காலியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் newindia.co.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறவிக்கப்பட்டது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 19 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New India Assurance Company has announced various job vacancies, how to apply

ரிஸ்க் இன்ஜினியர்ஸ், ஆட்டோ மொபைல் என்ஜினியர்கள், சட்டம், கணக்கு,மருத்துவம் , ஐடி, ஜெனரலிஸ்ட் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கு தனித்தனி கல்வி தகுதி உள்ளது. அரசு விதிகளின் படி வயது தளர்வும் உண்டு. ஊதியம் மற்றும் தகுதி உள்ளிட்ட முழுவிவரத்தை newindia.co.in என்ற தளத்தில் அறியலாம்.

நிறுவனம் வகை : மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனம்

வேலை தரும் நிறுவனம்: "நியூ இந்தியா அசூரன்ஸ்" நிறுவனம்

மொத்தம் : 450 காலி இடங்கள்

கடைசி தேதி : 21.08.2023

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: newindia.co.in

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு இணையதளம்: newindia.co.in

ஸ்டெனோகிராபர் பணி : ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் ஸ்டெனோகிராபர் கிரேடு சி (93), கிரேடு டி (1114) என மொத்தம் 1,207 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1-8-2023 அன்றைய தேதிப்படி கிரேடு சி பணி இடத்துக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2-8-1993-க்கு முன்போ 1-8-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அதேபோல் கிரேடு டி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1996-க்கு முன்போ 1-8-2005-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஸ்டெனோகிராபி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2023 ஆகும். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+