தேர்வு இல்லை.. மாத சம்பளம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்.. சென்னையிலேயே பணி.. அழைக்கும் என்எப்எஸ்யூ
டெல்லி: தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வெவ்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 6 முக்கிய நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.70 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்எப்எஸ்யூ (NFSU) எனும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (National Forensic Sciences University)செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக ரிப்போர்ட்டிங் ஆபிசர் (Reporting Officer) மற்றும் சயின்டிபிக் அசிஸ்டென்ட் (Scientific Assistant ) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ரிப்போர்ட்டிங் ஆபிசர் பணிக்கு 6 பேர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு 10 பேர் என மொத்தம் 16 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் டெல்லி, சண்டிகர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மேற்கூறிய 16 பணியிடங்களில் ரிப்போர்ட்டிங் ஆபிசர் பிரிவில் சென்னையில் ஒரு காலியிடமும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவில் சென்னையில் 2 பணியிடமும் காலியாக உள்ளது.
ரிப்போர்ட்டிங் ஆபிசர் மற்றும் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் எம்டெக், எம்இ, எம்எஸ்சி, எம்சிஏ பிரிவுகளில் டிஜிட்டல் பாரின்சிக், கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ரிப்போர்ட்டிங் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.70 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். இந்த 2 பதவிகளுக்கான வேலை என்பது தற்காலிகமானது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் பயோடேட்டா மற்றும் உரிய ஆவணங்களை Campus Director, National Forensic Sciences University Gandhinagar என்ற முகவரிக்கு ஆன்லைனில் www.nfsu.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
இது ஒரு தற்காலிக பணி என்பதால் வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முதலில் ஒரு ஆண்டு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு தேவையை பொறுத்து 4 ஆண்டு வரை பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications