போலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்
மதுரை: நாடார் மகாஜன சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட காவலர் தேர்வுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பலரும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

நாடார் சமுதாயத்தினரின் நலனுக்காக இயங்கி வரும் நாடார் மகாஜன சங்கம் சார்பில் காவலர் பயிற்சி முகாம் ஒன்று மதுரையில் நடத்தப்பட்டது. மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில்நடந்த இந்த முகாமில், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.

முகாம் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 23 பெண்கள் உள்ளிட்ட 110 பேர்கள் எழுத்து தேர்வில் தேர்வாகியுள்ளனர். இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை நாடார் சமுதாயப் பிரமுகர் கரிக்கோல் ராஜ் செய்து கொடுத்திருந்தார். இந்த முகாம் வெற்றிகரமாக நடைபெற உதவிய மகாஜன சங்கத்தின் இணைச்செயலாளர் ஏ.ஆனந்தகுமார், அனைத்து பனிகளையும் முன்னின்று செய்த சந்தோஷபாண்டியன், ஐசக், சேகர்பான்டியன் , மற்றும் ராஜேஷ், பயிற்சி தந்த அகாடமி ஆசிரியர் முத்துக்குமார், உடற்கல்வி இயக்குநர் குமார், மானவிகளுக்கு பயிற்சியளித்த ஆசிரியை ஜாஸ்மின் அவர்களுக்கு சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.


தற்போது சங்கத்தின் சார்பில் மதுரை நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 2வது கட்ட பயிற்சி முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே கலந்து கொள்ளாத மாணவ, மாணவியரும் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

தகவல், படங்கள்: ஏவிஎஸ் மாரிமுத்து


-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications