குரூப் 2 தேர்வு முறையில் மேஜர் மாற்றம்.. போட்டி தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிஎன்பிஎஸ்சி
சென்னை: குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2,030 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதுபோக குரூப் 2 தேர்வு நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்படுகிறது. காலியாகும் பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு தேர்வு மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

புதிய அட்டவணை: தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் விதமாக வருடாந்திர கால அட்டவணையை வெளியிட்டு அதன்படி தேர்வுகளை நடத்தி வருகிறது தேர்வு ஆணையம். அந்த வகையில் , 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணையில் குறிப்பிட்டிருந்த குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு, காலிப்பணியிடங்கள், தேர்வுத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை மாற்றி அமைத்திருக்கிறது டிஎன்பிஎஸ்சி.
பணியிடங்கள் அதிகரிப்பு: அதன்படி, குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2,030 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முன்பு வெளியிட்டு இருந்த அட்டவணையில் ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்வு அறிவிப்பு வெளியாகிறது.
இனி நேர்முகத்தேர்வு கிடையாது: இதுமட்டும் இன்றி தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டு உள்ளது. குரூப்-2 பதவிகளுக்கு இதுவரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இனி குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தமிழ் தகுதித்தாள் தேர்வு மற்றும் பொதுப் பாடங்களுக்கான டெஸ்கிரிப்டிவ் முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.
தேர்வு முறையில் மாற்றம்: அதேபோல், குரூப்-2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான திட்டமும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, விரித்துரைக்கும் முறையில் தமிழ் தகுதித்தாள் தேர்வும், பொதுப்பாடங்கள், பகுத்தறிவு மற்றும் பொது நுண்ணறிவு, மொழிப்பாடங்கள் ஆகியவை 'ஆப்ஜெக்டிவ்' முறையில் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே குரூப்-1 பதவிகளுக்கு 65 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது புதிய அட்டவணையில் 90 இடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.. 6,244 குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந்தேதி நடக்கிறது. திருத்தப்பட்ட அட்டவணையை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
-
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications