குரூப் 2 தேர்வு முறையில் மேஜர் மாற்றம்.. போட்டி தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த டிஎன்பிஎஸ்சி
சென்னை: குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2,030 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. அதுபோக குரூப் 2 தேர்வு நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்படுகிறது. காலியாகும் பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு தேர்வு மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

புதிய அட்டவணை: தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் விதமாக வருடாந்திர கால அட்டவணையை வெளியிட்டு அதன்படி தேர்வுகளை நடத்தி வருகிறது தேர்வு ஆணையம். அந்த வகையில் , 2024-ம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணையில் குறிப்பிட்டிருந்த குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு, காலிப்பணியிடங்கள், தேர்வுத்திட்டம், தேர்வு தேதி ஆகியவற்றை மாற்றி அமைத்திருக்கிறது டிஎன்பிஎஸ்சி.
பணியிடங்கள் அதிகரிப்பு: அதன்படி, குரூப்-2, 2ஏ பணியிடங்கள் 1,264 ஆக இருந்ததை 2,030 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முன்பு வெளியிட்டு இருந்த அட்டவணையில் ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்வு அறிவிப்பு வெளியாகிறது.
இனி நேர்முகத்தேர்வு கிடையாது: இதுமட்டும் இன்றி தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டு உள்ளது. குரூப்-2 பதவிகளுக்கு இதுவரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. இனி குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தமிழ் தகுதித்தாள் தேர்வு மற்றும் பொதுப் பாடங்களுக்கான டெஸ்கிரிப்டிவ் முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.
தேர்வு முறையில் மாற்றம்: அதேபோல், குரூப்-2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான திட்டமும் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, விரித்துரைக்கும் முறையில் தமிழ் தகுதித்தாள் தேர்வும், பொதுப்பாடங்கள், பகுத்தறிவு மற்றும் பொது நுண்ணறிவு, மொழிப்பாடங்கள் ஆகியவை 'ஆப்ஜெக்டிவ்' முறையில் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே குரூப்-1 பதவிகளுக்கு 65 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது புதிய அட்டவணையில் 90 இடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.. 6,244 குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந்தேதி நடக்கிறது. திருத்தப்பட்ட அட்டவணையை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications