டிகிரி போதும்.. மாதம் ரூ.25,000 டூ ரூ.1.17 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் பிஜிசிஐஎல் நிறுவனம்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஜிசிஐஎல்-ல் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பணிக்கு தேர்வாகும்போது மாதம் குறைந்தபட்சமாக ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 500 வரை சம்பளம் பெற முடியும்.
மத்திய மின் துறைஅமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்(Power Grid Corporation Of India Limited or PGCIL) எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் இந்தியாவின் மின்வினியோகத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்நிலையில் தான் பிஜிசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்களின் விபரம்: பிஜிசிஐஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள தற்போதைய அறிவிப்பின்படி ஜூனியர் ஆபிசர் டிரெய்னி (எச்ஆர்) பணிக்கு மொத்தம் 39 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஒரு பணியிடம் என்பது Backlog ஆகும் என பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு என்பது 05.10.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிபிஏ, பிபிஎம், பிபிஎஸ் அல்லது அதற்கு நிகரான ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு கூடுதல் கல்வி தகுதியை பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதாவது மேற்கூறிய படிப்பில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 5ம் தேதிக்குள் powergridindia.com எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, Computer Based தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications