டிகிரி போதும் + அனுபவம் வேண்டாம்.. சென்னையிலேயே ஐடி வேலை.. அழைக்கும் பிரபல நிறுவனம்
சென்னை: சென்னையில் இயங்கி வரும் பிரபரல நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணி முன்அனுபவம் இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
தமிழகத்தில் ஏராளமான முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் ப்ரோபல் (Propel). இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி ப்ரோபல் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான கல்வி தகுதி உள்பட பிற விபரங்கள் வருமாறு:
சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். என்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் துறையில் ஏதேனும் ஒரு படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். 2023, 2024ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இதன் மூலம் பணி அனுபவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
ப்ரோகிராமிங் லேங்குவேஜின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். அதோடு c, c++, Java, C#, Pythone, JavaScript உள்ளிட்ட ஏதேனும் ஒரு ப்ரோகிராமிங் லேங்குவேஜை நன்கு கற்று தெரிந்திருக்க வேண்டும். டேட்டா பேசஸ், டேட்டா ஸ்ட்ரெக்சர், ஓஓபிஎஸ் உள்ளிட்டவை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனையை தீர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோருக்கு முதலில் Aptitude Test அதன்பிறகு Programming Test நடத்தப்படும்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து நேர்க்காணல் என்பது நடத்தப்படும். இப்படி பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல் 6 மாத காலம் என்பது பயிற்சி காலமாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யவது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications