அசத்தலான வாய்ப்பு.. மாதம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம்! மதுரை டிஆர்டிஏ-வில் சூப்பர் வேலை
மதுரை: மதுரை டிஆர்டிஏ-வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் டிஆர்டிஏ எனும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எனும் துறை செயல்பட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும், மேற்பார்வையிடுவது இதன் முக்கிய பணியாகும். அதோடு மத்திய, மாநில அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதும் இந்த முகமையின் பணியாக தான் இருக்கிறது.

இந்நிலையில் தான் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டிஆர்டிஏ-வில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக முழுவிபரம் வருமாறு:
மதுரை டிஆர்டிஏ-வில் தற்போது இன்பர்மேஷன், கல்வி, தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ் கம்யூனிகேஷன், மாஸ் மீடியா, சோசியல் மொபைலிேஷசன், பப்ளிக் செக்டார் கம்யூனிகேசன் உள்ளிட்ட பிரிவுகளில் பட்ட மேற்படிப்டை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பவளளம் வழங்கப்படும்.
மேலும் ‛சாலிட் வேஸ்ட் மேனேஸ்மேன்ட்' மற்றும் ‛சானிடேசன் பிரிவுக்கு எக்ஸ்பர்ட்' பணிக்கு 2 பேரும், ‛லிக்யூட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் எக்ஸ்பர்ட்' பணிக்கு ஒருவரும், திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (
Planning convergence and monitoring) பிரிவில் எக்ஸ்பர்ட் பணிக்கு ஒருவரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் ‛சாலிட் வேஸ்ட் மேனேஸ்மேன்ட் மற்றும் சானிடேசன்' மற்றும் ‛லிக்யூட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்' எக்ஸ்பர்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ படிப்பை சுற்றுசூழலியல் மற்றும் சிவில் பிரிவில் முடித்திருந்து ஒன்று அல்லது 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கான எக்ஸ்பர்ட் பணிக்கு பிடெக், எம்பிஏ, எம்எஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
‛சாலிட் வேஸ்ட் மேனேஸ்மேன்ட் மற்றும் சானிடேசன்' மற்றும் ‛லிக்யூட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்' எக்ஸ்பர்ட், திட்டமிடல் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கான எக்ஸ்பர்ட் பணிக்கு தலா ரூ.35 ஆயிரம் சம்பவளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அனைவரும் அவுட் சோர்சிங் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 18ம் தேதிக்குள் ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டவுன்லோட் செய்து முழுமையாக பூர்த்தி செய்த The Project Director, District Rural Development Agency, Collectorate, Madurai - 625 020' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகம் ஏதேனும் இருப்பின் வேலை நேரத்தில் 74026 07999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications