மத்திய அரசின் SAIL நிறுவனத்தில் வேலை.. லட்சத்தில் சம்பளம்.. தேதி முடிய போகுது.. விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான SAIL - நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதிதான் கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா(SAIL). இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: கெமிக்கல் என்ஜினியரிங் (03 பணியிடங்கள்), சிவில் என்ஜினியரிங் (03), எலக்ட்ரிக்கல் என்ஜிரியங்(03), இன்ஸ்ட்ருமெண்டல் என்ஜினியரிங் (26) , மெக்கானிக்கல் என்ஜினியரிங் (34), Metallurgy என்ஜினியரிங் (05), மைனிங் என்ஜினியரிங்( 14) என மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து என்ஜினியரிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் படிப்பு முடித்து இருப்பது அவசியம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் பார்த்துக் கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினர் 31 வயது வரை விண்னப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 - ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை உண்டு. துறையில் பணியற்றும் விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி உண்டு.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு குரூப் டிஸ்கசன் நடைபெறும். பின்னர் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் முடிந்த பிறகு ஒரு வருடம் தகுதிகான் காலம் (probation) ஆகும்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்ள் ஒராண்டு காலம் பயிற்சியில் இருப்பார்கள். அப்போது மாத ஊதியமாக ரூ.50,000 முதல் ரூ. 1,60,000 வழங்கப்படும். ஓராண்டு பயிற்சிக்காலம் முடிவடைந்த பிறகு அவர்களின் மாத ஊதியம் ரூ.60,000 முதல் ரூ. 1,80,000 என உயர்த்தப்படும்
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ஒபிசி பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 31.12.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு அறிவிப்பை படிக்க https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/sail/pdf/Detailed%20Advt.-SRD.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்னும் சில தினங்களே எஞ்சியிருப்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரரர்கள் தாமதம் இன்றி உடனே அப்ளை செய்யுங்கள்..
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications