மாதஊதியம் ரூ.44,500 டூ ரூ.89,150.. ‛செபி’யில் உதவி மேலாளர் பதவி! சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!
டெல்லி: மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் செபி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு சட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500 முதல் ரூ.89,150 வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்திய பங்கு சந்தைகள், நிதி சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாக செபி எனும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI or Securities and Exchange Board of India) இயங்கி வருகிறது. இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

செபி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆபிசர் கிரேடு ஏ (உதவி மேலாளர்) பணிக்கு மொத்தம் 25 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சட்டப்படிப்பு, எல்எல்பி படிப்பை முடித்திருக்க வேண்டும் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி, ஓய்வு சர்வீஸ்மேன்களுக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி (பொது) பிரிவினருக்கு 10 வயது வரையும், பிடபிள்யூடி (ஓபிசி) பிரிவினருக்கு 13 வயது வரையும், பிடபிள்யூடி (எஸ்சி/எஸ்டி) பிரிவினருக்கு 15 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 31.05.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.44,500 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக என்றால் ரூ.89,150 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ரூ.1000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது ரூ.100 ஆக உள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 9ம் தேதிக்குள் sebi.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பிப்போர் ஆன்லைன் தேர்வு (பேஸ் I, II), நேர்க்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வோர் Click Here
-
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications