தினமும் 800 ரூபாய் உதவித்தொகை.. தமிழக அரசே வழங்கும் பயிற்சி.. 100 சதவீதம் வேலை வாய்ப்பு உறுதி
கோவை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளிகளுக்கு 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளிகளுக்கு 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தால் தொடங்கப்பட உள்ளது.

இதில் 3 மாத காலப் பயிற்சியில், முதல் ஒரு மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட தையூரில் அமைந்துள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும், 2 மாத கால பயிற்சி நாவலூா் எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெறுபவா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. வரை படித்திருக்கலாம்.
வயது 18 முதல் 20 வரை இருத்தல் வேண்டும். இதில், கொத்தனாா், வெல்டா், எலக்ட்ரீசியன், பிளம்பா், காா்பெண்டா், கம்பி வளைப்பவா் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவருக்கும் எல் அன்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிறுவனத்தால் 100 சதவீதம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
ஒரு வார கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்:
7 நாள்கள் வழங்கப்படும் இப்பயிற்சி, தையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறுபவா்களுக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். 3 ஆண்டுகள் தொடா் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
கொத்தனாா், வெல்டா், எலக்ட்ரீசியன், பிளம்பா், காா்பெண்டா், கம்பி வளைப்பவா் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியாளா்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும். இதில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
தமிழ்நாடு கட்டுமானக் கழகம், எல் அன்ட் டி கட்டுமானத் திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் கீழ் உள்ள திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தகுதியான, விருப்பமுள்ள தொழிலாளா்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications