தென்னக ரயில்வேயில் 132 அப்ரன்டீஸ் பணியிடங்கள்.... விண்ணப்பிக்க ரெடியா?
தென்னக ரயில்வேயில் 2017 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை : தென்னக ரயில்வேயில் 132 அப்ரன்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15-07-2017 அன்று மாலை (5 மணி) 17:00 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.
தெற்கு ரயில்வே காலியிடங்கள் விவரம் :
மொத்த எண்ணிக்கை : 132
வேலையின் தன்மை : அப்ரன்டீஸ் பணியிடங்கள்
பணி விரங்கள் -
1. கேரேஜ் மற்றும் வேகன் பட்டறை / பெரம்பூர் : 80 காலியிடங்கள்
2. மின் பட்டறை / பெரம்பூர் : 32 காலியிடங்கள்
3. ரயில்வே மருத்துவமனை / பெரம்பூர் : 20 காலியிடங்கள் மொத்தம் 132 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
15 வயது முதல் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித் தகுதி :
10 ம் வகுப்பு மற்றம் 12ம் வகுப்பு படித்தவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை -
விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 15-07-2017 அன்று 17:00 மணி.
மேலும் விபரங்களுக்கு கிளிக் செய்யவும்