மத்திய ஆயுத காவல் படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. 69 ஆயிரம் வரை சம்பளம்.. செம சான்ஸ்!
சென்னை: மத்திய ஆயுத காவல் படைகளில் ஒன்றான சசிர சீமா பல் 827 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஓட்டுநர், கால்நடை, தோட்டக்காரர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.69 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
சசிர சீமா பல் (SSB) என்பது நாட்டின் மத்திய ஆயுத காவல் படைகளில் ஒன்றாகும். இது இந்தியா நேபாளம் மற்றும் இந்தியா - பூடான் எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுகிறது. கடந்த 1963 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த படை, எல்லை பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், மற்றும் அவசர காலங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறது.

இந்த நிலையில் இதில் 827 கான்ஸ்டபிள் (ஓட்டுநர், கால்நடை, தோட்டக்காரர், தண்ணீர் கொண்டு செல்பவர், செருப்பு தைப்பவர், தையல்காரர், சலவையாளர், முடிதிருத்துபவர், சர்வார், தச்சர், நர்சிங் உதவியாளர்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணியிடங்களின் விவரங்கள்:
ஓட்டுநர் (ஆண்களுக்கு மட்டும்) - 553,
கால்நடை - 34,
தோட்டக்காரர் - 41,
தண்ணீர் கொண்டு செல்பவர் - 05,
செருப்பு தைப்பவர் - 25,
தையல்காரர் - 41,
சலவையாளர் - 74,
முடிதிருத்துபவர் - 43,
சர்வார் - 03,
தச்சர் - 07,
நர்சிங் உதவியாளர் - 01
கல்வித் தகுதி, அனுபவம்:
* கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கால்நடை கான்ஸ்டபிள் பதவிக்கு அறிவியல் ஒரு பாடமாகவும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனையில் ஒரு வருட அனுபவம் தேவை.
* ஓட்டுநர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (HMV) கட்டாயம். இந்தப் பணி ஆண்களுக்கு மட்டுமே.
* தோட்டக்காரர், சலவையாளர், முடிதிருத்துபவர், சர்வார், தண்ணீர் கொண்டு செல்பவர், செருப்பு தைப்பவர் மற்றும் தையல்காரர் போன்ற கான்ஸ்டபிள் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் அல்லது 1 வருட ITI சான்றிதழ் + 1 வருட அனுபவம் அல்லது ITI-யில் 2 வருட டிப்ளோமா அவசியம். இவர்கள் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
* தச்சர் கான்ஸ்டபிள் பணிக்கு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் அல்லது 1 வருட ITI சான்றிதழுடன் 1 வருட அனுபவம், அல்லது ITI-யில் 2 வருட டிப்ளோமா தேவை.
* நர்சிங் உதவியாளர் பதவிக்கு அறிவியல் பாடத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்கம் அல்லது ரெட் கிராஸ் சொசைட்டியின் முதல் உதவி சான்றிதழ் மற்றும் ஒரு வருட அனுபவமும் கட்டாயம்.
வயது வரம்பு:
* வயது வரம்பு 20.04.2026 நிலவரப்படி கணக்கிடப்படும். கான்ஸ்டபிள் (கால்நடை), கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) மற்றும் கான்ஸ்டபிள் (நர்சிங் உதவியாளர்) ஆகிய பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கான்ஸ்டபிள் (தச்சர்) பணிக்கு 18 முதல் 25 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* கான்ஸ்டபிள் (தோட்டக்காரர், சலவையாளர், முடிதிருத்துபவர், சர்வார், தண்ணீர் கொண்டு செல்பவர், செருப்பு தைப்பவர், தையல்காரர்) பணிகளுக்கு 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பட்டியல் ஜாதி/பழங்குடியினருக்கு (SC/ST) வயது வரம்பில் 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் கான்ஸ்டபிள்களுக்கு, நிலை - 3 ஊதிய விகிதத்தின்படி, மாதம் ரூ. 21,700/- முதல் ரூ. 69,100/- வரை ஊதியம் வழங்கப்படும். அனைத்து கான்ஸ்டபிள் பணிகளுக்கும் ஒரே அளவிலான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வு (PET), உடல் தரத் தேர்வு (PST), கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மற்றும் விரிவான மருத்துவ பரிசோதனை (DME) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், மறு ஆய்வு மருத்துவ பரிசோதனை (RME) நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும். பெண்கள், பட்டியல் ஜாதி (SC), பழங்குடியின (ST) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ. 100/- கட்டணம் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், SSB-யின் https://ssb.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள 'Careers' பகுதிக்குச் சென்று, முழுமையான அறிவிப்பை கவனமாகப் படித்தபின் 21.03.2026 முதல் 20.04.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
-
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
IT Jobs: 7 பிரிவுகளில் காலியிடங்கள்.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஏப்ரல் 18-ல் இண்டர்வியூ -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications