தேதி முடிய போகுது! எஸ்எஸ்சியில் 17,727 காலிப்பணியிடங்கள்.. 1.40 லட்சம் சம்பளம்! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் சி பிரிவில் காலியாக உள்ள 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் ஆகும்.
எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு தேர்வுகள் மூலமாக எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. கை நிறைய சம்பளம், சமூகத்தில் கவுரமான வேலை, பணி பாதுகாப்பு போன்றவற்றால் வேலை தேடும் இளைஞர்கள் பலருக்கும் மத்திய அரசு பணியில் சேர்ந்து விட வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது.

ஆண்டுக்கு இருமுறை எஸ்எஸ்சி அறிவிப்புகளை வெளியிட்டு பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதனால் எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற முழு வீச்சில் தேர்வர்கள் படித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் தான், 17,727 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் எஸ்எஸ்சி வெளியிட்டது. நாளை தான் இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
பணியிடங்கள் விவரம்: மத்திய அரசு துறைகளில் இருக்கும் குரூப் பி மற்றும் சி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்படும். மொத்தம் 17,727 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியை பொறுத்தவரை எதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 18 - 27 வயதுடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை ரூ.44,900 - 1,42,400, ரூ. 35,400 - 1,12,400, ரூ29,200 - 92,300 மற்றும் ரூ.25,500 - 81,100 என பணியிடங்களுக்கு ஏற்ப வழங்கப்படும்.
தேர்வு முறை: Tier 1 & Tier 2 இரண்டு நிலை தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் Tier 1 தேர்வு, டிசம்பர் 2024-க்குள் Tier 2 தேர்வும் நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்டவை தேர்வு அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பிற்கான இணையதள முகவரியை கிளிக் செய்து தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். இரண்டு தேர்வுகளுமே கணிணி வழி தேர்வாகவே நடைபெறும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் ஜூலை 24 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. அதேபோல், எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கும் தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு நடைபெறும் நகரங்கள்: தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தேர்வுக்கு விண்ண்ப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பின தெரிந்து கொள்ள https://ssc.gov.in/login இங்கே கிளிக் செய்யவும்.
-
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்











Click it and Unblock the Notifications