சப்-இன்ஸ்பெக்டர் வேலை.. 1876 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
சென்னை: எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் டெல்லி காவல் படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை என மொத்தம் 1876 சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான எஸ்.எஸ்.சி (Staff Selection Commission) டெல்லி காவல் படை மற்றும் மத்திய பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்;

பணியிடங்கள் விவரம்:
டெல்லி காவல்துறையில் எஸ்.ஐ Sub-Inspector (Exe.) ஆண்கள்: 109 பணியிடங்கள்
டெல்லி காவல்துறையில் எஸ்.ஐ Sub-Inspector (Exe.) பெண்கள்: 53 பணியிடங்கள்
மத்திய பாதுகாப்பு படையில் எஸ். ஐ Sub-Inspector (GD): 1714 பணியிடங்கள்
என மொத்தம் 1876 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி என்ன?: டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு (PET) தேர்வு நடைபெறும்.
உடல் தகுதி: விண்ணப்பதாரர்கள் 170 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளிட்டோர் 165 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி தளர்வுகளும் உண்டு. இந்த விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2023 தேதியின் படி 20 வயதுக்கு குறையாமலும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். துறையில் ஏற்கனவே பணியாற்றுபவர்கள் அதாவது கான்ஸ்டபிள் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு 30 ஆகும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு நடைபெறும் இடங்கள்: இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தேர்வர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15.08.2023 ஆம் தேதி ஆகும். தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்படலாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications