எஸ்.ஐ. வேலை.. மத்திய அரசு பணி.. மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம்.. அருமையான வாய்ப்பு.. விட்றாதீங்க
சென்னை: டெல்லி போலீஸ், மத்திய ஆயுத படையில் காலியாக உள்ள 4,187 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசின் துறைகளில் உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல்துறை பணியிடங்களை நிரப்பும் பணியை எஸ்.எஸ்.சியே மெற்கொள்கிறது.

காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது அறிவிப்புகளை பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுத படையில் 4,187 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: டெல்லி காவல்துறையில் 186 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 125 ஆண் போலீஸ் மற்றும் 61 பெண் போலீஸ் என மொத்தம் 186 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய ஆயுதப்படை CAPFs-ல் 4001 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தமாக 4,187 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 02.08.1999 முன்பாக பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?:
* CAPFs -சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் ரூ..35,400-.1,12,400/ வரை சம்பளமாக கிடைக்கும்.
* டெல்லி காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ரூ.35,400 - 1,12,400-வரை சம்பளமாக கிடைக்கும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 28.03.2024 கடைசி நாளாகும்.
தேர்வு முறை: ஆன்லைன் வழி தேர்வு முறை, உடல்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். புதுவையிலும் நடைபெறுகிறது. கணிணி வழி தேர்வு மே 9, 10, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/final%20notice%20cpo%202024%2004.03.2024.pdf இங்கே கிளிக் செய்யவும்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications