Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் 35 ஆயிரம் சம்பளம்.. மத்திய அரசு வேலை.. 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி தான்.. உடனே அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள எஸ்எஸ்சி ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. கை நிறைய சம்பளம், சலுகைகள், பணி பாதுகாப்பு என மத்திய அரசு பணிகளில் பல சலுகைகளை இருப்பதால் எப்படியாவது மத்திய அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியமாக உள்ளது.

ssc-jobs-261-stenographer-posts-c-d-grade-how-to-apply-details

இந்த நிலையில் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலம்.

பணியிடங்கள் விவரம்:

261 ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்: சி & டி கிரேடு: இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.08.2025 தேதிப்படி, கிரேடு சி பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, ஆகஸ்ட் 2, 1995 முதல் ஆகஸ்ட் 1, 2007க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கிரேடு டி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு 27 ஆகும். 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் , 2007 ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். இதன்படி பார்த்தால், 30 வயது அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கிரேடு சி பணியிடத்திற்கு எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?

ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என மூன்று கட்ட தேர்வுகளுக்கு பின் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.

தேர்வுக் கட்டணம்

தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு 06.6.2025 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வரும் 26.06.2025 கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 1.07.2025 முதல் 02.05.2025 வரை வரை அவகாசம் அளிக்கப்படும். தேர்வு நடைபெறும் நாள்: 6 ஆகஸ்ட் 2025 முதல் 11 ஆகஸ்ட் 2025க்குள் ஆகும்.

தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_steno_2025.pdf.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+