மாதம் 35 ஆயிரம் சம்பளம்.. மத்திய அரசு வேலை.. 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி தான்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள எஸ்எஸ்சி ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. கை நிறைய சம்பளம், சலுகைகள், பணி பாதுகாப்பு என மத்திய அரசு பணிகளில் பல சலுகைகளை இருப்பதால் எப்படியாவது மத்திய அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் லட்சியமாக உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலம்.
பணியிடங்கள் விவரம்:
261 ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்: சி & டி கிரேடு: இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01.08.2025 தேதிப்படி, கிரேடு சி பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, ஆகஸ்ட் 2, 1995 முதல் ஆகஸ்ட் 1, 2007க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிரேடு டி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு 27 ஆகும். 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் , 2007 ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். அதாவது, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். இதன்படி பார்த்தால், 30 வயது அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கிரேடு சி பணியிடத்திற்கு எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என மூன்று கட்ட தேர்வுகளுக்கு பின் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்
தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு 06.6.2025 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வரும் 26.06.2025 கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 1.07.2025 முதல் 02.05.2025 வரை வரை அவகாசம் அளிக்கப்படும். தேர்வு நடைபெறும் நாள்: 6 ஆகஸ்ட் 2025 முதல் 11 ஆகஸ்ட் 2025க்குள் ஆகும்.
தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_steno_2025.pdf.
-
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா?












Click it and Unblock the Notifications