10 வகுப்பு படித்திருந்தால் போதும்... அட்டகாசமான மத்திய அரசு வேலை ரெடி... மறக்காம அப்ளை பண்ணுங்க
சென்னை: மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு வேலைகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவது அரசு பணியாளர் தேர்வு ஆணையம். இதில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியாளர்களுக்கான பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியாக உள்ள பணியிடங்கள்: எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்த அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும்
சம்பளம்: 7 வது ஊதியக்குழு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை : விரும்பும் பணிகளுக்கான விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.nic.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய்
தேர்வு செய்யும் முறை: இந்தப் பணியிடத்திற்கு இரண்டு எழுத்துத் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும்
வயது வரம்பு: 18 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிஎஸ் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கடைசி தேதி: மார்ச் 21
கூடுதல் தகவல்களுக்கு : https://ssc.nic.in/Portal/Apply












Click it and Unblock the Notifications