தமிழ்நாடு சப்-இன்ஸ்பெக்டர் வேலைதான் கனவா? வந்தது அறிவிப்பு.. ரெடியா இருங்க.. TNUSRB முக்கிய அப்டேட்
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) வேலைக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாராகிக் கொண்டு இருக்கும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் பல இளைஞர்களுக்குக்கும் இருக்கும். அந்த காக்கி உடையின் கம்பீரம் மீது உள்ள ஆசையில் அதற்காக தவம் இருப்பவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். காவலராக பணியில் சேர்ந்து அதன்பின்னர் உயர் தேர்வுகள் எழுதி பெரிய உயர் அதிகாரியாகவும் மாற முடியும்.

பணி பாதுகாப்பு, சமூகத்தில் மதிப்பு மரியாதையோடு மக்களுக்கு சேவை என பணியில் திருப்தி இருக்கும் என்பதால் போலீஸ் வேலை என்பது பெரும் கனவாக பலருக்கும் உள்ளது. கல்லூரி படிக்கும் போதே சில மாணவ மாணவிகள் காவலர் தேர்வை மனதில் வைத்து உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்.
அறிவிப்பு எப்போது?: காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் பல இளைஞர்கள் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் எப்போது அறிவிப்பு வெளியிடும் என்பதை எதிர்பார்த்து காத்திருப்பதையும் காண முடியும். வழக்கமாக தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஆண்டு 3,359 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதேபோல் எஸ்.ஐ பணியிடத்திற்கான அறிவிப்பு மே மாதம் வெளியானது. மொத்தம் 621 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த முறை வெளியானது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் எஸ்.ஐ தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் உள்ளது.
தேர்வு அறிவிப்பு வரும் முன்பே அதை எதிர்பார்த்து படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்கள் பலரும் எத்தனை பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும்... எப்போது வெளியிடப்படும் என்ற ஆர்வத்துடன் இருப்பதை காண முடிகிறது. இந்த சூழலில்தான், சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான நோட்டிபிகேஷன் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்றால் ஜூலை அல்லது ஆகஸ்டில் எழுத்து தேர்வு நடைபெறலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
தேர்வு முறை: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று வகையான கட்டங்களை கடந்த பின்னர் தகுதியான தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வும் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் தமிழ் தகுதி தேர்வு நடத்தப்படும். இதில், 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தது 32 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
இரண்டாம் பகுதியில் பொது அறிவு (45 வினாக்கள்) மற்றும் உளவியல் (25) சார்ந்த வினாக்கள் இடம் பெற்று இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெறும். உடல் தகுதி 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதன்பிறகு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
கடந்த காலங்களில் எஸ்.ஐ தேர்வுக்கு இந்த முறையே பின்பற்றப்பட்டது. எனினும் தேர்வு அறிவிப்புக்கு பிறகே எத்தனை காலிப்பணியிடங்கள், தேர்வு எப்போது, தேர்வுமுறை உள்ளிட்டவை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிய வரும். ஜூன் மாதத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருப்பதால் எஸ். ஐ தேர்வுக்காக படித்து கொண்டு இருப்பவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications