தமிழ்நாடு சப்-இன்ஸ்பெக்டர் வேலைதான் கனவா? வந்தது அறிவிப்பு.. ரெடியா இருங்க.. TNUSRB முக்கிய அப்டேட்
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) வேலைக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் தயாராகிக் கொண்டு இருக்கும் தேர்வர்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் பல இளைஞர்களுக்குக்கும் இருக்கும். அந்த காக்கி உடையின் கம்பீரம் மீது உள்ள ஆசையில் அதற்காக தவம் இருப்பவர்கள் தமிழகத்தில் பலர் இருக்கிறார்கள். காவலராக பணியில் சேர்ந்து அதன்பின்னர் உயர் தேர்வுகள் எழுதி பெரிய உயர் அதிகாரியாகவும் மாற முடியும்.

பணி பாதுகாப்பு, சமூகத்தில் மதிப்பு மரியாதையோடு மக்களுக்கு சேவை என பணியில் திருப்தி இருக்கும் என்பதால் போலீஸ் வேலை என்பது பெரும் கனவாக பலருக்கும் உள்ளது. கல்லூரி படிக்கும் போதே சில மாணவ மாணவிகள் காவலர் தேர்வை மனதில் வைத்து உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்.
அறிவிப்பு எப்போது?: காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் பல இளைஞர்கள் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் எப்போது அறிவிப்பு வெளியிடும் என்பதை எதிர்பார்த்து காத்திருப்பதையும் காண முடியும். வழக்கமாக தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஆண்டு 3,359 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதேபோல் எஸ்.ஐ பணியிடத்திற்கான அறிவிப்பு மே மாதம் வெளியானது. மொத்தம் 621 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த முறை வெளியானது. இந்த நிலையில், நடப்பு ஆண்டில் எஸ்.ஐ தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் உள்ளது.
தேர்வு அறிவிப்பு வரும் முன்பே அதை எதிர்பார்த்து படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்கள் பலரும் எத்தனை பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும்... எப்போது வெளியிடப்படும் என்ற ஆர்வத்துடன் இருப்பதை காண முடிகிறது. இந்த சூழலில்தான், சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான நோட்டிபிகேஷன் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்றால் ஜூலை அல்லது ஆகஸ்டில் எழுத்து தேர்வு நடைபெறலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
தேர்வு முறை: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று வகையான கட்டங்களை கடந்த பின்னர் தகுதியான தேர்வர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வும் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் தமிழ் தகுதி தேர்வு நடத்தப்படும். இதில், 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தது 32 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
இரண்டாம் பகுதியில் பொது அறிவு (45 வினாக்கள்) மற்றும் உளவியல் (25) சார்ந்த வினாக்கள் இடம் பெற்று இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெறும். உடல் தகுதி 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதன்பிறகு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
கடந்த காலங்களில் எஸ்.ஐ தேர்வுக்கு இந்த முறையே பின்பற்றப்பட்டது. எனினும் தேர்வு அறிவிப்புக்கு பிறகே எத்தனை காலிப்பணியிடங்கள், தேர்வு எப்போது, தேர்வுமுறை உள்ளிட்டவை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிய வரும். ஜூன் மாதத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருப்பதால் எஸ். ஐ தேர்வுக்காக படித்து கொண்டு இருப்பவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications